×

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: கலெக்டரிடம் புகார்

தேனி, ஜூன் 18: கண்டமனூரை சேர்ந்த ஆட்டோ சங்கத் தலைவர் சுப்புராஜ் தலைமையில் மினிலோடு வண்டி ஓட்டுனர் நலச்சங்கத்தினர் நேற்று தேனி கலெக்டர் பல்லவிபல்தேவிடம் கோரிக்கை மனு அளித்தனா. அம்மனுவில் கூறியிருப்பதாவது: கண்டமனூரில் பஸ்நிலையம் அருகே தனியார் ஒருவர் திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்டியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் இருந்த பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. விசேஷ நாட்களின்போது, விசேஷ வீட்டினர் வெடிக்கும் பட்டாசுகளால் இப்பகுதியில் பெரும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் கர்ப்பிணிகள், வயதானோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு, பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...