×

திரைப்பட கலைஞர் பாலத்தில் தற்கொலை

திண்டுக்கல், ஜூன் 18: தேனி மாவட்டம் போடி, காலனி தெருவை சேர்ந்தவர் கணேசன்(42). இவர் சென்னையில் திரைப்படத்துறையில் மேக்கப் மேனுக்கு உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது மகன் திருமணத்திற்காக 2 நாளுக்கு முன் போடிக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு புறப்பட்டார். இந்நிலையில் நேற்று காலையில் திண்டுக்கல்-திருச்சியில் உள்ள மேம்பாலத்தின் கம்பியில் சட்டையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : film artist bridge ,
× RELATED நத்தம் அருகே பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு