×

பாத்ரூமில் வழுக்கி விழுந்து காவலாளி பலி

திருச்சி, ஜூன் 18: திருச்சி பாலக்கரை பென்சனர் தெருவை சேர்ந்தவர் முனீர்பாய் (70). இவரது மனைவி மற்றும் மகன் மும்பையில் உள்ளனர். இவர் மரக்கடை பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் வாட்ச்மேனாக பணியில் இருந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி திரையரங்க பாத்ரூமில் வழுக்கி விழுந்த முனீர்பாய்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முனீர்பாய் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு இறந்தார்.
இதுகுறித்து தில்லைநகர் போலீசில் உறவினர் சவுக்கத்அலி என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : guards ,bathroom ,
× RELATED காவலாளியை சுட்டுக் கொன்ற வனத்துறையினர் 2 பேர் கைது