×

பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு 25ம் தேதி கடைசி

திருச்சி, ஜூன் 18: திருச்சி மாவட்டத்தில் 2019ம் ஆண்டுக்கு மத்திய அரசின் பத்ம விருதுகள் பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மத்திய அரசின் 2019ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளான பத்ம விபூசன், பத்ம பூசன், பத்ம விருதுகள் பெறுவதற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் விளையாட்டில் தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் தங்களுடைய முழு விவரங்களுடன், சாதனைக்கான ஆவணங்களுடன் ஜூன் 25ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்திற்கு 3 பிரதிகளுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் கலெக்டர் பரிந்துரையுடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பப்பட உள்ளது. மேற்காணும் விருதிற்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் சிவராசு தெரிவி–்த்துள்ளார்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி