×

சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது

விழுப்புரம், ஜூன் 18: விழுப்புரத்தில் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை ரயில்வே கேட் அருகே நேற்று பிற்பகல் சாலையோரம் நின்றிருந்த ஒரு ஆட்டோ திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அவ்வழியாக சென்றவர்கள் இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் ஜெய்சங்கர் தலைமையிலான மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அந்த ஆட்டோவில் இன்ஜின், டயர் ஏதும் இல்லாத நிலையில் குப்பைகொட்டும் இடம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மின்கம்பி உரசியதில் குப்பை தீப்பிடித்து எரிந்தபோது ஆட்டோவிலும் தீபரவி எரிந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக மேற்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...