உளுந்தூர்பேட்டை, ஜூன் 18: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல்நிலைய சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உடையானந்தல் கெடிலம் ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட சேகர்(34), முருகேசன்(37) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு டயர் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.