×

மணல் கடத்திய 2 பேர் கைது

உளுந்தூர்பேட்டை, ஜூன் 18:  உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல்நிலைய சப்- இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உடையானந்தல் கெடிலம் ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட சேகர்(34), முருகேசன்(37) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு டயர் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.


Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை