×

அரியலூர் துணை மின்நிலைய பணிகள் தீவிரம்

ரிஷிவந்தியம், ஜூன் 18:  ரிஷிவந்தியம் அடுத்த அரியலூர் துணை மின்நிலைய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.  விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட அரியலூர் துணை மின்நிலையம் புதிதாக கட்ட கடந்த நான்கு வருடத்திற்கு முன் சுமார் 2360 கோடி தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் கடந்த இரண்டு வருடத்திற்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து டிரான்ஸ்பார்மர் உதிரிபாகங்கள் ராட்சத லாரிகள் மூலம் வந்துள்ளது. மேலும் அரியலூர் துணை மின்நிலையத்தின் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக மிகப்பெரிய மின்சாதன உதிரிபாகங்கள் வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதனை பார்த்து செல்கின்றனர்.




Tags : Ariyalur ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...