×

திருச்செங்கோடு அருகே பழுதான கைப்பம்பை சரிசெய்ய கோரிக்கை

திருச்செங்கோடு, ஜூன் 18: திருச்செங்கோடு ஒன்றியம் தேவனாங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கீழேரிபட்டி நாடார் தெரு செல்லும் சாலையில், பொதுமக்கள் நலனுக்காக கைப்பம்பு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கைப்பம்பு  உடைந்து விட்டது. இதுகுறித்து ஊராட்சி அலுவலகம் மற்றும்  ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆழ்துளை கிணற்றில் போதிய அளவு தண்ணீர் இருந்தும்,  கைப்பம்பு பழுது நீக்கப்படாத காரணத்தால், பொதுமக்களுக்கு பயன்படாமல் உள்ளது. எனவே, இந்த கைப்பம்பை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruchengode ,
× RELATED லாரியில் கொண்டு வந்த ₹1.13 லட்சம் பறிமுதல்