×

மாணவி கடத்தல்; வாலிபர் மீது புகார்

கிருஷ்ணகிரி, ஜூன் 18:  கிருஷ்ணகிரி அருகே மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி அருகே ஒரப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் பிரியா (17, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). கடந்த 12ம் தேதி, ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிரியாவை 11ம் வகுப்பில் சேர்ப்பதற்காக அவரது தாய் அழைத்து சென்றார். அப்போது பள்ளியில் இருந்த பிரியா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, கந்திகுப்பம் போலீசில் பிரியாவின் தாய் புகார் அளித்தார். அதில், பாலிநாயனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெமினி என்பவரின் மகன் பிரசாந்த் (21), திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, தனது மகளை கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Student kidnapping ,youngster ,
× RELATED திருவண்ணாமலையில் கோலாகலமாக...