×

தூள்செட்டி ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றுநீரை கொண்டு வர வேண்டும்

தர்மபுரி, ஜூன் 18: தென்பெண்ணை ஆற்றில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு, கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக எம்பியிடம் கொமதேக வலியுறுத்தியுள்ளது.தர்மபுரி மாவட்ட கொமதேக செயலாளர் ஆனந்தகுமார், தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தென்பெண்ணை ஆற்றில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு, கால்வாய் வழியாக நீர் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்களிடம் பலமுறை மனு அளித்தும், எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை. சட்டமன்ற கூட்டத்தொடரில் திட்ட மதிப்பீடு மட்டும் அறிவிக்கப்பட்டது. ஆனால், வெறும் அறிவிப்போடு நிற்கிறது. பணிகள் எதுவும் தொடங்கவில்ல. எனவே, வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், தென்பெண்ணை ஆற்றில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு கால்வாய் மூலமாக நீர் கொண்டு வர பேசி, இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags : lake ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு