×

விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 2 முதியவர்கள் மீட்பு

விருத்தாசலம், ஜூன் 18: சென்னையிலிருந்து  திருச்சி, மதுரை, ராமேஸ்வரம் தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல  பகுதிகளுக்கு விருத்தாசலம் ரயில் நிலையம் வழியாக ரயில் இயக்கப்பட்டு  வருகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன.  அவற்றில் பயணம் செய்வதற்காக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள்  விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம்  ரயில்வே காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார்  ரயில் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அழுக்கு  உடை அணிந்து, தாடியுடன் சுற்றித்திரிந்த 2 முதியவர்களை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த மாதி  (58), நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாரக்கியனூரை சேர்ந்த  நடேசன் (68) என்பதும், உறவினர்கள் இன்றி அனாதையாக சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்த தகவலை ரயில்வே காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, ரயில்வே காவல்துறை துணை தலைவர்  பாலகிருஷ்ணன், திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார்,  டிஎஸ்பி சுப்பிரமணியன் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அளித்த ஆலோசனை  மற்றும் உத்தரவின்பேரில் முதியவர்கள் இருவருக்கும் உணவளித்து, புதிய துணிமணிகள் வாங்கி கொடுத்து விருத்தாசலம் அரசு மருத்துவமனை அருகில்  உள்ள வள்ளலார் முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : rescuers ,railway station ,Vriddhachalam ,
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...