×

இறையூர் ஊராட்சியில் பழுதடைந்து கிடக்கும் துணை சுகாதார நிலையம்

பெண்ணாடம், ஜூன் 18: பெண்ணாடம் அடுத்த இறையூர் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு சுற்றியுள்ள கூடலூர், நெய்
வாசல், பெ.பொன்னேரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் தினமும் சிகிச்சை பெற்று வந்தனர். நாளடைவில் பராமரிப்பின்றி பழுதடைந்ததால் சுகாதாரநிலையம் மூடப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் இங்கிருந்து 5 கி.மீ தூரமுள்ள பெண்ணாடம், 10 கி.மீ தூரமுள்ள தொளார், 12 கி.மீட்டர் தொலைவில் உள்ள திட்டக்குடிக்கு செல்லவேண்டிய அவலம் உள்ளது. இதனால் பெண்கள், முதியோர் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இது தொடர்பாக இப்பகுதி கிராமமக்கள் எம்எல்ஏ, எம்பி, மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை. எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி இறையூரில் பயன்பாடின்றி காட்சிபொருளாக உள்ள துணை சுகாதார நிலையத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : suburb ,health center ,
× RELATED ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு