×

சாராயம் விற்ற தம்பதி கைது

கடலூர், ஜூன் 18: கடலூர் முதுநகர் போலீசார், முதுநகர் மற்றும் அதனையொட்டிய பல்வேறு இடங்களில் சாராய வேட்டை நடத்தினர். பனங்காட்டு காலனி பகுதியில் நடந்த அதிரடி சோதனையில், அப்பகுதியை சேர்ந்த சங்கர் (50), அவரின் மனைவி வனிதா (42) ஆகியோர் தங்கள் வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தபோது பிடிபட்டனர்.  அதனையடுத்து 220 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், சாராயம் விற்ற கணவன், மனைவி இருவரையும் கைது செய்தனர்.

Tags : broom ,
× RELATED வேலூர் சிறையில் பணி செய்யவிடாமல்...