×

மாணவியை கடத்திய வாலிபர் மீது வழக்கு

விருத்தாசலம், ஜூன் 18:  கருவேப்பிலங்குறிச்சி அருகே மாணவியை கடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சக்கரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் இளையபெருமாள் மகள் ஆஷா (17). இவர் விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு காலையில் வீட்டை விட்டு சென்றுள்ளார். அப்போது வல்லியம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ரமேஷ் (23) என்பவர் ஆஷாவை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து ஆஷாவின் தாய் ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து கடத்தப்பட்ட மாணவி மற்றும் அவரை கடத்திய வாலிபர் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags : kid ,student ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...