×

அருகம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி சத்துணவு மைய கட்டிடத்தில் சேதமடைந்த ஜன்னல்கள்

கரூர், ஜூன் 18: கரூர் மாவட்டம் அருகம்பாளையத்தில் உள்ள ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு மைய கட்டிட ஜன்னல்களை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் வாங்கப்பாளையம் பகுதியில் இருந்து அரசு காலனி செல்லும் சாலையில் அருகம்பாளையம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் இந்த பகுதி மாணவ, மாணவிகள் நலன் கருதி அரசு சார்பில் துவக்கப்பள்ளி கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி வளாகத்தின் உட்புறத்தில் சத்துணவு மையம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்நிலையில் சத்துணவு மையத்தின் இரண்டு பகுதிகளிலும் உள்ள ஜன்னல்கள் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. உடைந்த நிலையில் உள்ள ஜன்னல் கதவுகள் தொங்கிக் கொண்டு உள்ளது.சத்துணவு மையத்தின் உட்புறம், சமையல் செய்ய பயன்படும் உணவுப் பொருட்கள், கேஸ் சிலிண்டர் போன்றவை உள்ளது. ஆனால் ஜன்னல்கள் திறந்த நிலையில் உள்ளதால் எந்த நேரமும் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.இதனை சரி செய்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் இதுநாள் சீர் செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.எனவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி உடைந்த நிலையில் உள்ள தகரத்திலான ஜன்னல்களை சரி செய்திட தேவையான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : building ,NPC Primary School ,
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி