×

தோகைமலை அருகே நள்ளிரவில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்: 2 பேர் கைது

தோகைமலை, ஜூன் 18: தோகைமலை அருகே கழுகூர் உடையாபட்டியில் நள்ளிரவில் மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சி எ.உடையாபட்டி பகுதியில் இரவு நேரங்களில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக கரூர் மாவட்ட எஸ்பி விக்ரமனுக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதனை அடுத்து மாவட்ட எஸ்பி விக்ரமன் உத்தரவின் பேரில் தோகைமலை இன்ஸ்பெக்டர் முகமதுஇத்ரீஸ் நேற்று முன்தினம் இரவு கழுகூர் உடையாபட்டி பகுதியில் சோதனை நடத்தினார். அப்போது குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டில் ஒரு டிராக்டர் அதிவேகமாக சென்று உள்ளது. அதிவேகமாக சென்ற டிராக்டரை தடுத்து நிறுத்திய போலீசார் டிராக்டரை சோதனையிட்டனர்.அப்போது கழுகூர் உடையாபட்டி கிழக்கு தெருவை சேர்ந்த சுப்பையா(41) மற்றும் அதே பகுதியை சேர்ந்த முத்து என்பவரது மகன் மணிவேல்(30) ஆகிய இருவரும் அரசு அனுமதி இல்லாமல் ஆற்றுவாரியில் இருந்து டிராக்டர் டிப்பரில் மணல் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்தனர். மேலும் அரசு அனுமதி இல்லாமல் ஆற்றுவாரியில் இருந்து மணல் கடத்திய சுப்பையா மற்றும் மணிவேல் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Tags : Thodimalyam ,
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா