×

கரூரில் பதுக்கி வைத்த 30 யூனிட் மணல் பறிமுதல்

கரூர், ஜூன் 18: கரூரில் உரிய அனுமதியின்றி மணல் கடத்தலை தடுக்க கரூர் ஆர்டிஓ சரவணமூர்த்தி நேற்று முன்தினம் அதிகாலை சோதனை நடத்தினார். கொடுத்தானூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்தார். நேற்று மாலை ஆண்டாள் கோவில் பகுதியில் தனியார் இடத்தில் உரிமம் இன்றி மணல் சலிப்பகம் இருப்பது தெரிய வந்தது. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 யூனிட் மணலை பறிமுதல் செய்தார் இது சம்பந்தமாக அந்தந்த போலீஸ் நிலைய பகுதியில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். மேலும் பட்டா நிலங்களில் மணல் பதுக்கி வைத்ததாக அந்த புகாரை அடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...