×

தஞ்சையில் 20ம் தேதி ஊனமுற்றோர் குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை, ஜூன் 18: தஞ்சை மாவட்டம் மற்றும் கோட்டத்துக்கு உட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 20ம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. முற்பகல் 12 மணிக்கு ஊனமுற்றோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் ஆர்டிஓ தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகள், ஊனமுற்றோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்து தீர்வு காணலாம். இவ்வாறு ஆர்டிஓ சுரேஷ் தெரிவித்துள்ளார்.


Tags : persons ,Thanjani ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...