×

டாக்டர்கள் போராட்டத்திற்கு ஆதரவு முத்துப்பேட்டையில் மருத்துவமனைகள் மூடல்:நோயாளிகள் அவதி

முத்துப்பேட்டை, ஜூன்18: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மருத்துவர்களின் நாடுதழுவிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து மருத்துவமனைகளும் மூடப்பட்டது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.
மேற்கு வங்கத்தில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய அடையாள வேலை நிறுத்த போராட்டம் நாடு முழுவதும் நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்திய மருத்துவ கழகம் பட்டுக்கோட்டை கோட்ட கிளை சார்பில்மருத்துவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேராவூரணி, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மதுக்கூர் ஆகிய பகுதியில் நேற்று காலை 6மணிமுதல் மாலை 6மணிவரை அடையாள வேலை நிறுத்தம் அறிவித்தது. அதன்படி நேற்று காலை முதல் முத்துப்பேட்டையில் உள்ள 10க்கும் மேற்பட்ட அனைத்து தனியார் மருத்துவமனைகளும் மூடப்பட்டது. அதேபோல் முத்துப்பேட்டை சுற்றுபகுதியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் நேற்று மூடப்பட்டது. இதனால் அவசர சிகிச்சைகளுக்கு நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

Tags : doctors ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை