×

சித்திரைக்குளம் பகுதியில் இலுப்பூர்-புதுக்கோட்டை சாலையில் குவிந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகள்

இலுப்பூர், ஜூன் 18: இலுப்பூர் - புதுக்கோட்டை சாலை சித்திரைக்குளம் பகுதியில் நகர் புறங்களில் இருந்து பழைய வீடுகள் இடிக்கப்பட்டு, அதன் இடிபாடுகளின் கழிவு மண் கொட்டப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வளர்ந்து வரும் பேரூராட்சி ஆகும். இப்பகுதியில் உள்ள பழைய வீடுகள் இடிக்கப்பட்டு அதன் கழிவு மண்கள் அப்புறப்படுத்தப்படுகிறது. அந்த கழிவு மண்களை ஒதுக்கு புறமான இடங்களில் கொட்டப்படாமல் வாகனங்கள் சென்று வரும் இலுப்பூர் - புதுக்கோட்டை சாலை சித்திரைக்குளம் பாலத்தின் அருகே கொட்டப்படுகிறது. சாலை ஓரத்தில் கொட்டப்படுவதால் வாகங்கள் சென்று வர மிகவும் இடையூறாக உள்ளது. சாலையின் அகலம் குறைவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் சிரமத்தை கருத்தி கொண்டு கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாடுகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Lupur-Pudukottai ,area ,Devikulam ,road ,
× RELATED மூணாறு அருகே சேதமடைந்த எஸ்டேட் சாலையை சீரமைக்க கோரிக்கை