×

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

பொன்னமராவதி,ஜூன்18: பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.பொன்னமராவதி அருகே காரையூர் பகுதியில் திருட்டு மணல் அள்ளிக்கொண்டு செல்வதாக புகார் வந்தது. இதையடுத்து அன்னவாசல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் காரையூரில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்ற லாரி பிடிபட்டது. இதனையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து காரையூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா