×

தறிகெட்டு ஓடிய மினி பஸ் வீட்டுக்குள் புகுந்தது 2 பேர் படுகாயம்

மணமேல்குடி, ஜூன் 18: மணமேல்குடியிலிருந்து தினசரி சிங்கவனம் கிராமத்திற்கு மினிபஸ் ஒன்று சென்று வருகிறது . வழக்கம் போல் நேற்று மாலை மினிபஸ் மணமேல்குடியிலிருந்து சிங்கவனத்திற்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் ஓட்டினார். பஸ் இடையாத்திமங்களம் பகுதியில் வேகமாக செல்லும்போது மின்கம்பத்தில் மோதி சாலையோரத்தில் இருந்த வீட்டுக்குள் புகுந்து நின்றது. இதில் பஸ்சில் பயணம் செய்த தண்டலை கிராமத்தை சேர்ந்த சாந்தி, பத்மாவதி ஆகிய இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மேலும் மின்கம்பம் உடைந்து விழுந்தது. வீட்டின் முன்புறத்தில் மோதி நின்றதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து மணமேல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : house ,
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?