×

12 கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் மாவலிங்கை கிராமத்தில் மாரியம்மன் சுவாமி திருவீதி உலா

பாடாலூர்,ஜூன் 18: ஆலத்தூர் தாலுகா மாவலிங்கை கிராமத்தில் திருக்கோயில்கள் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கம்ப பெருமாள், மாரியம்மன் சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.ஆலத்தூர் தாலுகா மாவலிங்கை கிராமத்தில் விநாயகர், முக்கனி விநாயகர், கம்ப பெருமாள், கிருஷ்ணர், மாரியம்மன் உள்ளிட்ட கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனையடுத்து சிங்கம் மற்றும் குதிரை வாகனத்தில்கம்ப பெருமாள், மாரியம்மன் சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது சுவாமிகள் திருவிழாவின் போது பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சிகளில் மாவலிங்கை, செட்டிகுளம், பொம்மனப்பாடி, குரூர், பெரகம்பி, நாட்டார்மங்கலம், சிறுவயலூர், தேனூர், கண்ணப்பாடி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Mariamman Swamy Thiruvithi ,village ,Mawalingi ,Rs ,
× RELATED பாணாவரம் அருகே விழிப்புணர்வு உடல்,...