×

பைக் மீது பள்ளி வேன் மோதி உறவினர்கள் 2 பேர் காயம்

தா.பழூர், ஜூன் 18: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணன் (36). தா.பழூர் அருகே உள்ள கூத்தங்குடி கிராமத்துக்கு தனது சகோதரியின் மகன் திருமணத்துக்கு செல்வதற்காக கடந்த 14ம் தேதி சரவணன், அவரது மனைவி மற்றும் அக்காவின் இளைய மகனான கூத்தங்குடியை சேர்ந்த வருண்தாஸ் (27) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். தாதம்பேட்டை அருகே சென்றபோது எதிரே வந்த தா.பழூர் தமிழ்மணி (28) என்பவர் ஓட்டி வந்த பள்ளி வேன், பைக் மீது மோதியது.இதில் சரவணன், வருண்தாஸ் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணன் கொடுத்த புகாரின்பேரில் தா.பழூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Relatives ,school van ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...