×

பொதுமக்கள் அவதி திருமானூர் அருகே போலீசாரை தாக்கிய 2 பேர் கைது

அரியலூர், ஜூன் 18: திருமானூர் அருகே போலீசாரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒரு மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த மோசடி வழக்கு சம்மந்தமாக அரியலூர் மாவட்டம் வெங்கனூரை சேர்ந்த அமிர்தராஜ்(42) என்பவரிடம் விசாரணை மேற்கொள்ள திருவெறும்பூர் போலீசார்கள் மணி, வசந்தகுமார், இன்பமணி ஆகியோர் நேற்று முன்தினம் வெங்கனூருக்கு சென்றனர்.அப்போது, போலீசாரை கண்டதும் அமிர்தராஜ் அவரது மகன் வினித்(21) இருவரும் சேர்ந்து போலீசாரை தாக்கினர். இதில் 3 பேரும் காயமடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து போலீஸ்காரர் மணி கொடுத்த புகாரின் பேரில் அமிர்தராஜ், வினித் ஆகிய 2 பேரையும் வெங்கனூர் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thirumannur ,
× RELATED திருமானூரில் தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை