×

திருவெண்காட்டில் புதிய நூலகம் திறப்பு

சீர்காழி, ஜூன் 18: சீர்காழி அருகே திருவெண்காட்டில் பல ஆண்டுகளாக பொது நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் வாசக வட்ட உறுப்பினர்கள் நிரந்தரமாக நூலக கட்டிடம் புதிதாக கட்ட வேண்டும் என கோரிக்கைை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து சீர்காழி எம்எல்எ பாரதி, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு சீர்காழி ஒன்றிய ஆணையர் கஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ரெஜினாராணி, மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன், வாசக வட்ட நிர்வாகிகள் தாண்டவமுர்த்தி, ஜெயபால், அகோரம், செழியன், ராஜகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறியாளர் முத்துகுமார் வரவேற்றார்.சீர்காழி எம் எல் ஏ பாரதி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் ஓய்வுபெற்ற பூம்புகார் கல்லூரி தமிழ் துறைத் தலைவர் அகரமுதல்வன். மாவட்ட நுகர்வோர் சேவை அமைப்பின் தலைவர் ராமசந்திரன், தமிழ் சங்கத்தை சேர்ந்த முத்துகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் கார்த்திக் நன்றி கூறினார்.

Tags : library opening ,Thiruvennath ,
× RELATED தரமான கல்வி வழங்குவதில் தமிழ்நாடு...