×

திருச்செந்தூர் அமலிநகரில் ஓராண்டுக்கு பிறகு அமைதி

திருச்செந்தூர், ஜூன் 18: திருச்செந்தூர் அமலிநகரில் இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் கடந்த ஓராண்டாக பதற்றமான சூழல் நிலவியது.
பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கடந்த 10ம் தேதி தூத்துக்குடி  கலெக்டர், எஸ்.பி முன்னிலையில் இரு தரப்பினரும் வழக்குகளை வாபஸ்பெற்று சமரசம் மேற்கொள்ள வாக்குறுதி அளித்தனர்.

இதன்தொடர்ச்சியாக ஆலந்தலை  பங்குத்தந்தை ஜெயக்குமார், ஊர் நலக்குழுவினர், அரசுத் துறை அதிகாரிகள் தொடர் முயற்சியால், நேற்று முன்தினம்  (16ம் தேதி) அற்புத ஜெப அரசர் சன்னதியில் இரு தரப்பினரும் முழு  சமாதானத்தின் அடையாளமாக  கை குலுக்கிக் கொண்டனர். மாலை 6 மணிக்கு அமலிநகருக்கு வந்த  தூத்துக்குடி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயர் ஸ்டீபன் நன்றி திருப்பலி நடத்தினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை அமலிநகர் ஊர்நலக்குழுவினர், பங்குத்தந்தை  ரவீந்திரன் பர்னாந்து செய்திருந்தனர்.

Tags : Tiruchendur Amalinagar ,
× RELATED திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில்...