×

நாணல்காட்டில் இன்று உலகு முத்தாரம்மன் கோயில் கொடைவிழா

தூத்துக்குடி, ஜூன்  18: வல்லநாடு அருகே நாணல்காட்டில் உலகு முத்தாரம்மன் கோயில் கொடை விழா இன்று (18ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி நேற்று குடிஅழைப்பு, கும்பம் ஏற்றுதல், மாக்காப்பு அலங்கார ஆராதனை, சாஸ்தா பிறப்பு பூஜை நடந்தது. இன்று காலை அரசமர செல்வ விநாயகர் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம், நேர்த்திக்கடன் வைபவம் நடக்கிறது. மதியம் கொடைவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் தாமிரபரணி நதிக்கரையில் இருந்து கிரகம் எடுத்து வீதியுலா, பொங்கலிடுதல், கும்பம் வைத்து அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு சாமக்கொடை நடக்கிறது.

Tags : world ,Muthuraman ,
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்