×

மனைவி குடும்பம் நடத்த மறுப்பு காவலாளி தற்கொலை

புழல், ஜூன் 18 : சென்னை புழல், கன்னடபாளையம், ஜீவா தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (40). இவர் தனியார் நிறுவன காவலாளியாக வேலை செய்தார். இவரது முதல் மனைவி இறந்ததால், 2வதாக ஜெயந்தி (33) என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதி இடையே சில மாதங்களாக குடும்பத் தகராறு இருந்து வந்தது. இதில் மனமுடைந்த ஜெயந்தி, கடந்த 10ம் தேதி தனது தாய் வீட்டுக்கு 2 குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.
இதன்பிறகு சசிகுமார் பலமுறை சென்று அழைத்தும் ஜெயந்தி வர மறுத்துவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை சசிகுமார் வீட்டுக்குள் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவலறிந்ததும் புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சசிகுமாரின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை