×

மாற்றுத்திறனாளிகளுக்கு பேரிடர் குறைதீர் கூட்டம்

பொன்னேரி, ஜூன் 18:  பொன்னேரி அருகே கள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாங்கோடு கிராமத்தில் மாற்று திறனாளிகள் உள்ளடக்கிய பேரிடர் அபாய குறை தீர்க்கும் திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாற்று திறனாளிகளை பேரிடர் காலங்களில் பாதுகாத்து கொள்ளவும், அவர்களுக்கான பேரிடர் பாதுகாப்பு குறித்தும் சென்னை சமூக சேவை சங்க இயக்குனர் தந்தை ஜோசப் அறிவுரையின்படி, பேரிடர் காலங்களில் தங்கள் பாதுகாப்பை கண்டறியும் வகையில் மாற்று திறனாளிகளுக்கு வரைபடங்கள் மூலம் விளக்கப்பட்டது. இதில் கள்ளூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னை சமூக சேவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஹாஜா மொய்தீன் செய்திருந்தார்.

Tags : Disaster Disaster Meeting ,
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்