×

வேன் மோதி கல்லூரி காவலாளி பலி

கூடுவாஞ்சேரி, ஜூன் 18: மினிவேன் மோதியதில், தனியார் கல்லூரி காவலாளி பலியானார்.வண்டலூர் அருகே மண்ணிவாக்கம், ராஜி தெருவை சேர்ந்தவர் வீரராகவன் (52). வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சாந்தி (45), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு வீரராகவன், வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார்.மண்ணிவாக்கத்தில் ஓட்டேரி காவல் நிலையம் எதிரே, வண்டலூர் - வாலாஜபாத் சாலையை வீரராகவன் கடந்தார். அப்போது, அவ்வழியே பழங்களை ஏற்றி வந்த ஒரு மினி வேன், அவர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை கண்ட, டிரைவர் வேனை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிவிட்டார்.தகவலறிந்து ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மினிவேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Van molly college keeper kills ,
× RELATED காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில் வேதபாடசாலை மாணவர்கள் ஆய்வு