×

ஜமாபந்தியில் 20 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை

ராஜபாளையம், ஜூன் 14: ராஜபாளையத்தில் நடந்த ஜமாபந்தியில் 20 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. ராஜபாளையம்  தாலுகா அலுவலகத்தில், சேத்தூர் குறு வட்டத்தை சேர்ந்த கிராமங்களுக்கான  ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. கோட்டாட்சியர் காளிமுத்து, தாசில்தார்  ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவில் சேத்தூர், சோலைசேரி,  முத்துசாமிபுரம், கோவிலூர், தேவதானம், மேட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை  சேர்ந்த மக்கள் பட்டா மாற்றம், அடிப்படை வசதி கோரி மனு அளித்தனர். கிராம  கணக்குகள் பராமரிக்கப்பட்டது தொடர்பாக தணிக்கை செய்யப்பட்டது. நிலவரி,  தண்ணீர் தீர்வை, உள்ளூர் வரி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்த 20 பேருக்கு, பட்டா மாறுதல் ஆணையை  கோட்டாட்சியர் காளிமுத்து வழங்கினார்.

Tags : Patta ,
× RELATED நத்தம் பட்டா மாறுதலுக்கு இ-சேவை வழியாக...