×

காலையில் கல்யாணம் மதியம் தேர்வு

வாடிப்பட்டி, ஜூன் 14:வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியை சேர்ந்த நாராயணன் மகன் கவுசல்யா. பரவை தனியார் கல்லூரியில் பிஎட் படித்து வருகிறார்.
இந்நிலையில் கவுசல்யாவுக்கும், அலங்காநல்லூரை சேர்ந்த சுதர்சன் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நேற்று காலை நீரேத்தானில் உள்ள நவநீத பெருமாள் கோயிலில் திருமணம் நடந்தது. இதற்கிடையே நேற்று கவுசல்யாவுக்கு ஆங்கில தேர்வு எழுத வேண்டியிருந்தது. இதனால் திருமணம் முடிந்த கையுடன் மதியம் 2 மணிக்கு கல்லூரிக்கு சென்று மணக்கோலத்திலேயே தேர்வு எழுதினார். உடன் மணமகன், பெற்றோர்கள் வந்திருந்தனர். மணக்கோலத்தில் தேர்வுக்கு வந்த கவுசல்யாவுக்கு சக மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : wedding ,
× RELATED பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு...