×

காங்கயம் தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம்

காங்கயம், ஜூன் 14:  காங்கயம் தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று காலை 10 மணிக்கு ஜமாபந்தி துவங்கியது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில் காங்கயம் வருவாய் உள்வட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் தங்களது கோரிக்கை அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தனர். காங்கயம் உள்வட்டத்தை சேர்ந்த கத்தாங்கண்ணி, கணபதிபாளையம், படியூர், சிவன்மலை, தம்மரெட்டிபாளையம், ஆலாம்பாடி, காங்கயம், வீரணம்பாளையம், வட்டமலை, காடையூர் ஆகிய பகுதி பொதுமக்கள் மொத்தம் 374 மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.அதன்படி தகுதியான 5 நபர்களுக்கு பட்டா மாறுதல் ஆணை, மாற்று திறனாளிக்கான உதவித்தொகை, வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான ஆணை என மொத்தம் 7 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் உடனடி ஆணைகளை  வழங்கினார்.

 முன்னதாக மேற்கண்ட 10 கிராமங்களுக்கான நில அளவை சங்கிலி மற்றும் கோண கட்டை அளவையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.  இந்த ஜமாபந்தியில் காங்கயம் தாசில்தார் விவேகானந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டாட்சியர்கள் மற்றும்  வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இன்று ஊதியூர் உள்வட்டதைச் சேர்ந்த ஆரத்தொழுவு, வட சின்னாரிபாளையம், சம்மந்தம்பாளையம், காங்கயம்பாளையம், குருக்கம்பாளையம், நெழலி, ஊதியூர், முதலிபாளையம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.

Tags : Jamapanti ,Kakkaya Taluka ,
× RELATED வாலாஜாபாத் ஜமாபந்தியில் 76 பேருக்கு நலத்திட்ட உதவிகள்