×

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டது ஏன்? அதிகாரிகள் தீவிர விசாரணை

சென்னை: தர்மபுரி மாவட்டம், ஜரூர் தாலுகா மந்திக்குளம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் வேலுச்சாமி (24). காவலராக பணிபுரியும் இவர், தற்போது சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள பழைய அரசு விருந்தினர் மாளிகையில் கடந்த 5 நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு 6 மணி முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலுச்சாமி, அங்கிருந்த டைனிங் ஹாலுக்கு சென்று அமர்ந்துள்ளார்.அப்போது, பாதுகாப்பு பணிக்காக வைத்திருந்த 303 ரக துப்பாக்கியை திடீரென தனது தொண்டை குழிக்கு நேராக வைத்து தனக்கு தானே சுட்டுக்கொண்டார். துப்பாக்கி குண்டு பாய்ந்த வேகத்தில் தாடையை துளைத்துக் கொண்டு அவரது நெற்றிக்கு நேராக வெளியில் வந்தது. இதில், அவரது தலையிலிருந்து அதிக ரத்தம் வெளியாகியதால் அந்த இடம் முழுவதும் ரத்தம் சிதறியது. துப்பாக்கி  வெடிக்கும் சத்தம் கேட்டு அங்கிருந்த மற்ற போலீசார் டைனிங் ஹாலுக்கு ஓடி வந்தனர். வேலுச்சாமி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இந்த தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். உடனடியாக கூடுதல் கமிஷனர் கண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். நெற்றி வழியாக குண்டு வெளியில் வந்தாலும், அவரது மூளைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். நேற்று அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். பின்னர், தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து, எதற்காக அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டது ஏன்? அதிகாரிகள் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Ponnusamy ,Veluchami ,Mandikulam ,Jarur taluka, Dharmapuri district ,Dinakaran ,
× RELATED தடுப்பணையில் மூழ்கி 3 மாணவர்கள் பலி