×

மணல் அள்ளிய லாரி பறிமுதல்


திருமயம், ஜூன் 14: அரிமளம் அருகே ஏம்பல் பகுதி வழியாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்தது. இதனை தொடாந்து அப்பகுதியில் உள்ள கண்ணங்குடி விலக்கு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்எஸ்ஐ மாரிமுத்து அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அனுமதியின்றி சட்டவிரோதமாக 2 யூனிட் மணல் சிவகங்கை மாவட்ட பகுதிக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதனை தொடாந்து தேவகோட்டையை சேர்ந்த லாரி  டிரைவர் ரவியை போலீசார் கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.


Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு