×

வாலிபர் சங்க நிர்வாகி படுகொலையை கண்டித்து புதுக்கோட்டையில் சாலை மறியல் போராட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 14: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலையை செய்யப்பட்டார்.இதை கண்டித்து புதுக்கோட்டையில் வாலிபர், மாணவர், மாதர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் துரை.நாராயணன் தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன், மாநிலக்குழு உறுப்பினர் ஓவியா, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் சுசீலா, செயலாளர் சலோமி, பொருளாளர் பாண்டிசெல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டு படுகொலையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதேபோன்று, இக்கோரிக்கையை வலியுறுத்தி அறந்தாங்கி மற்றும் கந்தர்வக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் பேருந்து நிலையம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அசோக் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஒன்றிய தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் லோகேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Road protest action ,Pudukkottai ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...