×

ரூ.4,100 அபராதம் வசூலிப்பு செந்துறையில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் கோர்ட் திறப்பு

செந்துறை, ஜூன் 14: செந்துறை பகுதிகளை சேர்ந்தவர்கள் நீதிமன்ற பணிகளுக்கு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. இதனால் செந்துறையில் நீதிமன்றம் அமைப்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் செந்துறை மேற்கு ராஜவீதியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது.நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி திறந்து வைத்தார். செந்துறை முதல் அமர்வு நிதிபதியாக மாணிக்கம் பதவியேற்று வழக்குகளை விசாரித்தார். கலெக்டர் விஜயலட்சுமி, எஸ்பி னிவாசன் மற்றும் நீதிபதிகள் உடனிருந்தனர்.



Tags : Criminal Court ,
× RELATED புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்ட...