×

அரியலூர் மாவட்டத்தில் வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி

அரியலூர், ஜூன் 14: அரியலூர் மாவட்டத்தில் வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி வரும் 19ம் தேதி நடக்கிறது.அரியலூர் மாவட்டத்தில் வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி வரும் 19ம் தேதி துவங்குகிறது. அதன்படி உடையார்பாளையம் வட்டத்தில் ஜமாபந்தி ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் வரும் 19ம் தேதி நடைபெறும். இதில் தா.பழூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட இருகையூர், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சிபெருமாள் நத்தம், தா.பழூர், கோடங்குடி (வடபாகம்), கோடங்குடி (தென்பாகம்), நாயகனைப்பிரியாள், இடங்கண்ணி, உதயநத்தம் (மேல்பாகம்), உதயநத்தம் (கீழ்பாகம்), அணைக்குடம் (பொற்பதிந்தநல்லூர் உட்பட), சோழமாதேவி, கோடாலிக்கருப்பூர், வேம்புகுடி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெறும்.அரியலூர் வட்டத்துக்கான ஜமாபந்தி, தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 19ம் தேதி நடைபெறும். இதில் அரியலூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட பொட்டவெளி, இலுப்பையூர், ராயபுரம், சென்னிவனம், ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், அமினாபாத், அரியலூர் வடக்கு, அரியலூர் தெற்கு, வாலாஜாநகரம், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர், பெரியநாகலூர், தேளுர், காவனூர், விளாங்குடி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறும்.செந்துறை வட்டத்துக்கு உட்பட்ட ஜமாபந்தி செந்துறை தாசில்தார் அலுவலகத்தில் உடையார்பாளையம் ஆர்டிஓ தலைமையில் வரும் 19ம் தேதி நடைபெறும். இதில் செந்துறை உள்வட்டத்துக்கு உட்பட்ட ஆனந்தவாடி, உஞ்சினி, மருவத்தூர், பெரியாக்குறிச்சி, வஞ்சினபுரம், நமங்குணம், நக்கம்பாடி, செந்துறை ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெறும். ஆண்டிமடம் வட்டத்துக்கான ஜமாபந்தி ஆண்டிமடம் தாசில்தார் அலுவலகத்தில் அரியலூர் ஆர்டிஓ தலைமையில் 19ம் தேதி நடைபெறும். இதில் ஆண்டிமடம் உள்வட்டத்துக்கு உட்ட்பட்ட ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ராமன், இராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், ஆண்டிமடம், விளந்தை (வடபாகம்), விளந்தை (தென்பாகம்), வரதராஜன்பேட்டை, பெரியகிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், அணிக்குதிச்சான் (வடபாகம்), அணிக்குதிச்சான் (தென்பாகம்) ஆகிய வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறும். எனவே பொதுமக்கள் ஜமாபந்திகளில் பட்டா மாறுதல், பெயர் மாறுதல், நிலஅளவை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட தனிப்பட்ட கோரிக்கை மற்றும் பொதுவான கோரிக்கை மனுக்களை அளித்து உடனடி தீர்வு கண்டு பயன்பெறலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.19ம் தேதி நடக்கிறதுஜமாபந்திகளில் பட்டா மாறுதல், பெயர் மாறுதல், நிலஅளவை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட தனிப்பட்ட கோரிக்கை மற்றும் பொதுவான கோரிக்கை மனுக்களை அளித்து உடனடி தீர்வு கண்டு பயன்பெறலாம்.

Tags : revenue villages ,Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் செந்துறையில் 100...