×

காரைக்கால் வள்ளல் சீதகாதி லயன்கரை மக்களுக்கு இலவச மனைப்பட்டா வேண்டும்

காரைக்கால், ஜூன் 14: காரைக்கால் வள்ளல் சீதகாதி லயன்கரை பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்களுக்கு, இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மற்றும் சப்-கலெக்டரிடம் மமக மனு வழங்கி வலியுறுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் (மமக) மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது தலைமையில், மமக மாவட்ட செயலாளர் ஷாஜஹான், தமுமுக மாவட்ட செயலாளர் கமால் ஹீஸைன், நகரத் தலைவர் ஜெஹபர் சாதிக், நகர துணை செயலாளர் தீன், காரைக்கால் வள்ளல் சீதக்காதி லயன்கரை நூர்தீன், முஹம்மது அலி மற்றும் அப்பகுதி மக்கள் காரைக்கால் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா மற்றும் சப்-கலெக்டர் ஆதர்ஷ் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து ஓர் மனு அளித்தனர்.அம்மனுவில், காரைக்கால் வள்ளல் சீதக்காதி லயன்கரை பகுதியில் கடந்த 20 வருடங்களாக வசிக்கும் மக்களுக்கு குடியிருப்பு பட்டா இல்லாத காரணத்தினால் அடிப்படை வசதிகளான மின்சாரம், கழிவறை, அரசால் கல்வீடு கட்ட கொடுக்கப்படும் மானிய தொகை போன்ற எந்த ஒரு வசதிகளையும் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அப்பகுதி மக்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்று, அவர்கள் தற்போது வசிக்கும் வீடுகளுக்கு இலவச பட்டா அல்லது அரசால் வழங்கக் கூடிய வேறொரு இடத்தில் இலவச குடியிருப்பு மனை வழங்கி கல்வீடு கட்ட மானிய தொகையும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Karaikal Vallal Seethakati ,Leyangar ,bedroom ,
× RELATED நித்திரவிளையில் சுற்றுச்சூழல் தினம்