×

நாகை வெளிப்பாளையத்தில் மின்கசிவால் 3 வீடுகள் தீயில் சேதம்

நாகை,ஜூன்14:நாகை வெளிப்பாளையம் வஉசி தெருவை சேர்ந்தவர் தீபன்ராஜ். இவரது குடிசை வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்து ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக திடீரென நேற்று முன்தினம் நள்ளிரவு தீப்பிடித்தது. அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் தீ மளமளவென பிடித்து எரிந்து அருகே உள்ள பரமு, ரகுநாதன் ஆகியோரின் குடிசை வீடுகளில் தீப்பிடித்து. ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்து. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தீ விபத்து குறித்து தகவல் அறிந்த நாகை கலெக்டர் சுரேஷ்குமார் நேற்று தீ விபத்தில் பாதித்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நிவாரணமாக ரூ.5 ஆயிரமும், அரிசி, வேஷ்டி சேலைகள் ஆகியவற்றை வழங்கினார். தாசில்தார் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : homes ,Naga Expressway ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை