×

திருவட்டார் தொழிலதிபர் இல்ல திருமணம் இன்று திருச்செந்தூரில் நடக்கிறது

குலசேகரம், ஜூன் 14:  திருவட்டாரை சேர்ந்த தொழிலதிபர் ஜெயகுமார், ராஜகுமாரி தம்பதி மகன் டாக்டர் ஆஷிக் ஜெய்சேகருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளங்கோ ரவிராஜா, சசிகலா தம்பதி மகள் ஹரிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களின் திருமணம் இன்று அதிகாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைத்து நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் பரமன்குறிச்சி எ.ஆர்.எ.எஸ் திருமண மண்டபத்தில் திருமண விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நாளை சனிக்கிழமை மாலை 4 மணிக்கு திருவட்டார் எக்ஸல் சென்ட்ரல் பள்ளி வளாகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் செய்துள்ளனர்.

Tags : Thiruvattar Businessman ,Tiruchendur ,
× RELATED திருச்செந்தூர் நகராட்சியில்...