×

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூன் 14:  குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பாட புத்தகங்கள், சீருடைகள் வரும் 18ம் தேதி செவ்வாய் கிழமைக்குள் கிடைத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாகவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது நடுத்தர வர்க்கத்தினரை மட்டுமல்ல அனைத்து தரப்பு பெற்றோர் மற்றும் மாணவர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது. இத்தகைய அவல நிலைகளை கல்வித்துறை, அரசின் அதிகாரபூர்வ கவனத்திற்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பதில்சிங் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் காவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Indian ,student association ,
× RELATED மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்