×

இளம்பெண், ஊழியர் மாயம்

நாகர்கோவில், ஜூன் 14: குளச்சல் ஆசாத்நகரை சேர்ந்தவர் செய்யது மகள் முகமதுருபாயா (28). இவர் 10ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த இருநாட்களுக்கு முன்பு தனது தோழி வீட்டிற்கு ெசல்வதாக கூறிச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முகமதுருபாயாவின் தாயார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேப்போன்று மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளையை சேர்ந்தவர் சுரேந்திரகுமார். இவரது மகள் தன்யா (25). இவர் அம்மாண்டிவிளை பகுதியில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற தன்யா வேலைக்கும் செல்லவில்லை.வீடும் திரும்பவில்லை. இதுகுறித்து சுரேந்திரகுமார் அளித்த புகாரின் பேரில், மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்யாவை ேதடி வருகின்றனர்.

Tags : Teenager ,
× RELATED ஐதராபாத் வாலிபர் ரஷ்யாவில் மரணம்