×

டேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

திருச்செங்கோடு, ஜூன் 14: சர்வதேச டேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த திருச்செங்கோடு மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தேக்வாண்டோ போட்டியில், தமிழகம் சார்பில் திருச்செங்கோடு டேக்வாண்டோ அகாடமி மாணவர்கள் 9 பேர் கலந்து கொண்டனர். இதில், கிராண்ட் மாஸ்டர் லீ ஜான் கி தலைமையில் பிரேக்கிங் முறையில் நடைபெற்ற போட்டியில் 6 தங்கப்பதக்கமும், ஒரு வெள்ளிப்பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களை, நாமக்கல் மாவட்ட டேக்வாண்டோ அகாடமி  தலைவரும், அரசியல் நிர்ணயசபை குழு உறுப்பினருமான முதுபெரும் காங்கிரஸ் தலைவர் காளியண்ண கவுண்டர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் டேக்வாண்டோ மாநில பொதுச்செயலாளர் கேசவமணி, வழக்கறிஞர் ராஜேஸ்வரன், தியாகராஜன், முரளி கோபாலகிருஷ்ணன், தீபக் சஞ்சய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு