×

ராசிபுரத்தில் தமிழக முதல்வருக்கு அமைச்சர்கள் வரவேற்பு

நாமக்கல், ஜூன் 14: திருச்சியில் இருந்து சேலத்திற்கு செல்லும் வழியில், நாமக்கல் மாவட்ட எல்லையான அத்தனூர் பகுதியில் நேற்றிரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து நேற்றிரவு கார் மூலம், நாமக்கல் வழியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றார். இதையொட்டி, நாமக்கல் நகரில் வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டனர். முதல்வரின் கார், நாமக்கல் நகருக்குள் வந்தபோது முக்கிய சாலைகளில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ராசிபுரம்-அத்தனூர் பிரிவு ரோட்டில்  மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, கலெக்டர் ஆசியா மரியம் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து முதல்வரை வரவேற்றனர். பின்னர், முதல்வர் அங்கிருந்து புறப்பட்டு சேலம் சென்றார். இந்த நிகழ்ச்சியின்போது எம்எல்ஏக்கள் பாஸ்கர், சந்திசேகரன், பொன்.சரஸ்வதி மற்றும் அதிமுகவினர் உடனிருந்தனர்.

Tags : Ministers ,Chief Minister ,Tamilnadu ,Rasipuram ,
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...