×

நாமக்கல் அருகே நூற்பாலையில் ₹6 லட்சம் நூல் பண்டல் திருட்டு

நாமக்கல், ஜூன் 14: நாமக்கல் அருகே நூற்பாலையில் ₹6 லட்சம் மதிப்பிலான நூல் பண்டல் திருடப்பட்டுள்ளது. நாமக்கல் -துறையூர் சாலையில், தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். நூற்பாலையில் சமீபத்தில் அதிகாரிகள் நூல்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, 38 பண்டல் நூல் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ₹6 லட்சம் இருக்கும். இதுகுறித்து நூற்பாலையின் பாதுகாப்பு பிரிவு அலுவலர் முத்துக்குமார், நாமக்கல் போலீசில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், நூற்பாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : pistol ,Namakkal ,
× RELATED நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!