×

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

நாமக்கல், ஜூன் 14: நாமக்கல் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிதம்பரம் மாவட்டம் சீர்காழியை அடுத்த பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(37). இவரது மனைவி செல்வி(34). இவர்கள், நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு பிரியா(15) என்ற மகள் உள்ளார். இந்நிலையில், செல்வி மீண்டும் கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு, நேற்று மாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சின்னத்தம்பி, பன்னீர்செல்வம் ஆகியோர் செல்வியை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது, வரும் வழியில் ஆம்புலன்ஸிலேயே செல்விக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Childbirth ,
× RELATED இயல்பான பிரசவத்திற்கு...