×

போலீசார் கெடுபிடியால் சாலையோர திடீர் கடைகளில்

‘ஹெல்மெட்’ விற்பனை ஜோர்தர்மபுரி, ஜூன் 14: ஜூன் 1ம் தேதி முதல் தர்மபுரி நகரில் அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும், ஹெல்மெட் அணிய வேண்டும் என தர்மபுரி டிஎஸ்பி ராஜ்குமார் அறிவுறுத்தியிருந்தார். இதையொட்டி கடந்த 3ம் தேதி தர்மபுரி நகரில், இருசக்கர வாகன ஓட்டிகளில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்த போலீசார் ஹெல்மெட் அணிவோம் என உறுதி மொழி எழுதி வாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து தினமும் போலீசார் வாகன தணிக்கை செய்து, ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

இதனால் தர்மபுரி நகரில் பாரதிபுரம், ஒட்டப்பட்டி, எஸ்விரோடு, ராமாக்காள் ஏரி, மதிகோன்பாளையம் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் ஹெல்மெட் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இங்கு ஒரு ஹெல்மெட் ₹500 முதல் ₹3 ஆயிரம் வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. போலீசாரின் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தரமான ஹெல்மெட் வாங்கி அணிய வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : outlet shops ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா