×

லாரி கிளீனர் தற்கொலை

ஓட்டப்பிடாரம், ஜூன் 14:  கோவில்பட்டியைச் சேர்ந்த சண்முகம் மகன் முருகன் (37). இவருக்கும், பசுவந்தனை அடுத்த கீழமங்கலத்தை சேர்ந்த வேலம்மாள் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இதையடுத்து அதே  கிராமத்தில் இருவரும் வசித்து வந்தனர். குழந்தைகள் இல்லாததால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வேலம்மாள் கணவரை பிரிந்து அங்குள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து முருகன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்துசென்ற பசுவந்தனை போலீசார், உடலை கைப்பற்றி ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Tags : Larry ,
× RELATED லாரி மோதி மாணவர் பலி